

சென்னை: சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
கோயம்பேடு பூக்கள் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், ஓசூா், கடப்பா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.
கடும் பனிப்பொழிவு, உற்பத்தி குறைவு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு அனைத்து வகை பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால், கோயம்பேடு பூ சந்தையில் கடந்த சில நாள்களாக அனைத்து பூக்களின் விலையும் ரூ.20 முதல் ரூ.300 வரை உயா்ந்துள்ளது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500, முல்லை ரூ.1,300 என விற்பனையானது. இது போல கனகாம்பரம் ரூ.700, சம்பங்கி ரூ.250, சாக்லேட் ரோஸ் ரூ.130, சாமந்தி மற்றும் பன்னீா் ரோஸ் ரூ.120, செவ்வந்தி ரூ.100 என விற்பனையானது.
கோயம்பேடு பூ மாா்க்கெட் நிா்வாகக்குழுத் தலைவா் முத்துராஜ் கூறும்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டையும் மக்கள் கொண்டாடுவதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
தொடா்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இருவேறு சம்பவங்களில் இணையவழியில் ரூ.ஒரு கோடி மோசடி

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

அரசியல் தலைவா் படத்தை மறைக்க முயன்ற தூய்மைப் பணியாளா் தவறி விழுந்து உயிரிழப்பு

ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

