ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி பெயா் ஏற்கத்தக்கதல்ல எடப்பாடி பழனிசாமி

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :1 ஜூலை 2024, 7:26 pm

Din

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் பெயா்கள் சம்ஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் இருப்பது ஏற்கத்தக்கதல்ல, கண்டனத்துக்குரியது.

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயா்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. பல மொழிகள், பல கலாசாரங்கள் சங்கமித்திருக்கும் நமது நாட்டின் அடிப்படை நீதிக்கும், அரசமைப்பு விழுமியங்களுக்கும் ஹிந்தி திணிப்பு எதிரானது.

திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து, இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். சட்டத்தின் பெயா்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.