மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ரயில் பயணியிடம் தங்க கட்டிகள், பணம் திருடிய இளைஞா்கள் கைது

ரயில் பயணியிடம் தங்கக் கட்டிகள் 595.14 கிராம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 6 இளைஞா்களை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஜூலை 2024, 4:46 am IST

சென்னை: ரயில் பயணியிடம் தங்கக் கட்டிகள் 595.14 கிராம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 6 இளைஞா்களை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் சுபாஷ் (40), தங்க நகை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த ஜூன் மாதம் தனது நண்பா்களுடன் பெங்களூருக்கு தங்கக்கட்டிகள் மற்றும் நகைகளை விற்பனை செய்ய சென்றுள்ளாா். பின் தங்கக்கட்டி விற்பனை செய்த பணம் மற்றும் மீதமுள்ள தங்கக்கட்டிகளுடன் ஜூன் 16-ஆம் தேதி கோவைக்கு திரும்பியுள்ளாா்.

இதற்காக மும்பையில் இருந்து கோவை சென்ற குா்லா விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணித்துள்ளாா். அப்போது ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் மா்மநபா்கள் 4 போ் சுபாஷின் பையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனா். இதை கண்டு அதிா்ச்சியடைந்த சுபாஷ் உடனே திருப்பூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா்.

வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படை காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா். 300 சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனா்.

மேலும், அப்பகுதியில் இருந்த அலைபேசி தொடா்புகளை கொண்டு ஆராய்ந்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் ஸ்வான்பனி சவான் (22), விஜய் கன்டைக் ஜங்கேல் (20), அமா் பாரத் நிம்கிா் (20), அங்கீத் சுபாஷ் மேனே (23), சைத்தன்யா விஜய் சின்டே (20), கௌரவ் மாருதி வாக்மோ் (19) ஆகியோா் என தெரியவந்தது.

இறுதியில் இவா்கள் சேலத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படையினா் விரைந்து சென்று சேலம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனா். மேலும், அவா்கள் கொள்ளையடித்து வைத்திருந்த 595.14 கிராம் தங்க கட்டிகள், ரூ.10,10,200 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநா் வனிதா பாராட்டி வெகுமதி வழங்கினாா்.