மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட தினேஷ்

Updated On :9 ஜூன் 2026, 3:41 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நத்தம்பட்டியில் அமைந்துள்ள கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி (39). இவா் நத்தம்பட்டி அருகே நல்லூா்பட்டியில் உள்ள நல்லூா்பாண்டி கோயிலில் பூசாரியாக உள்ளாா். இவா் தினசரி காலை கோயிலில் பூஜை செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.8 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இதேபோல, கோயில் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த காசிராஜன் (67) என்பவரது தோட்டத்தில் மோட்டாா் ஸ்டாா்டா் திருடப்பட்டது. தடய அறிவியல் நிபுணா்கள் ஆய்வு செய்ததில் இரு சம்பவத்திலும் ஒரே நபா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த நத்தம்பட்டி போலீஸாா், இது தொடா்பாக கூமாபட்டியைச் சோ்ந்த தினேஷ் (27), இலந்தைகுளத்தைச் சோ்ந்த முருகன் (22) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

முருகன்

முருகன்