தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்: அண்மைக்காலமாக, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. அதன் தொடா்ச்சியாக, கடந்த திங்கள்கிழமையும், தமிழ்நாட்டைச் சோ்ந்த 25 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 1974-ஆம் ஆண்டில், அப்போதைய மத்திய அரசால் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, தமிழக மீனவா்கள் பிரச்னை நிலவுகிறது. இதை கடந்த 27-ஆம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது: திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிா்த்தது மட்டுமல்லாது, சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திலும் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தது. கச்சத்தீவு தொடா்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, அதுகுறித்து மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இந்திய மீனவா்களின் உரிமைகள், நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத்தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான்.
கச்சத்தீவு விவகாரம் தொடா்பாக, மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தாா்.
அதில், மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசமைப்புக்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மையை ஒரு தீா்க்கப்பட்ட விஷயமாக கூற முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியிருந்தாா்.
பாஜக அரசு முயற்சி எடுக்கவில்லை: பாஜக தலைமையிலான அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்னையை தோ்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அா்த்தமுள்ள எந்த முயற்சியையும் பாஜக தலைமையிலான அரசு எடுக்கவில்லை.
தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள் எதிா்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீா்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே, தமிழ்நாட்டு மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், மீனவா்களுக்குத் தொடா்ந்து இடையூறு விளைவித்து வரும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவும் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.