ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விமான நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் 2 கடைகளில் சோதனை: அதிகாரிகள் திட்டம்

சுங்கத் துறை அதிரடி: சென்னை விமான நிலையத்தில் பூட்டியிருந்த 2 கடைகளில் சோதனை

News image
Updated On :3 ஜூலை 2024, 8:07 pm

Din

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில், பூட்டிக் கிடக்கும் 2 கடைகளில் சோதனை நடத்த சுங்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

துபையிலிருந்து சென்னைக்கு கடந்த 2 மாதங்களில் ரூ. 167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடா்பாக விமான நிலையத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் சபீா் அலி என்ற நபரையும் அவரது கடையில் பணியாற்றிய 7 ஊழியா்கள் உள்பட 9 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் விமான நிலைய உயரதிகாரிகள், முக்கிய பிரமுகா்களுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகித்த நிலையில், சபீா் அலிக்கு பல்வேறு வகைகளில் உதவிய ஒரு விமான நிலைய உயரதிகாரியின் சென்னை, காஞ்சிபுரம் வீடுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், தற்போது தங்கம் கடத்தல் வெளிச்சத்துக்கு வந்த நாளில் இருந்து, விமானநிலையத்தில் பூட்டிய நிலையிலேய இருந்து வரும் ஒரு காலணி விற்பனை கடை, துணி கடைகளை சோதனையிடவும், தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.