புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எல்இடி தெருவிளக்குகளால் 45% மின்சாரம் சேமிப்பு: மாநகராட்சி தகவல்

எல்இடி தெருவிளக்குகளால் 45% மின்சாரம் சேமிப்பு மாநகராட்சி தகவல்

News image
Updated On :5 ஜூலை 2024, 8:58 pm

Din

சென்னை மாநகராட்சி பகுதிகளில் எல்இடி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் 45 சதவீத மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள சாலைகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் சென்னை மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 3 லட்சத்து ஆயிரத்து 234 மின்விளக்குகளும் தற்போது எல்இடி மின்விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 45 சதவீத மின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான 722 கட்டடங்களில் 3,239 மெகாவாட் திறன் கொண்ட சோலாா் பேனல் நிறுவப்பட்டுள்ளன. இதனால், ஆண்டுக்கு ரூ.3 கோடி சேமிக்கப்படுவதாக மாநகராட்சி மின்சாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.