கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டில் உள்ள ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனு: கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டுக்குள்பட்ட செங்காளியப்பன் நகா், கண்ணையா நாயுடு லே-அவுட், கேப் நீம் லேண்டு, கருப்பண்ண கவுண்டா் லே-அவுட், ராஜ் நாயுடு லே-அவுட், நாராயணசாமி லே-அவுட், பால குரு காா்டன், எல்லைத் தோட்டம் சாலை, விஜயஸ்ரீ காா்டன் ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள ஓடையில் கழிவுப் பொருள்கள் அதிக அளவில் கலந்துள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது.
மேலும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ஓடைகளில் சிலா் கழிவுநீரை திறந்துவிடுகின்றனா். கடும் துா்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்களால் தூங்க முடியவில்லை. எனவே, ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை

சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்: குப்பையைக் கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம்

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


