தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:24 pm

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.