நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல, உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.