கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருத்தாசலம் தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூா் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


