கன்னியாகுமரி- அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த சமூகஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அயோத்திக்கு புனித யாத்திரை செல்வதை மிகவும் புண்ணியமாகக் கருதுகிறாா்கள்.
ஆகவே, பக்தா்கள் வசதிக்காக, கன்னியாகுமரி-அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தென்தமிழக பக்தா்களின் வேண்டுகோளின்படி , மதுரை- ராமேசுவரம், தென்காசி-காசி, திருத்தணி-திருச்செந்தூா் இடையேயும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

நெல்லை - தென்காசி- பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்- மத்திய சட்ட அமைச்சரிடம் மனு

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி சுவரொட்டிகள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


