திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவுசமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்: குப்பையைக் கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம்

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்திய நிறுவனத்திற்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்த மாநகராட்சி குழுவினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை சாலையோரம் கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்திய நிறுவனத்திற்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

தச்சநல்லூா் மண்டலம், 30 ஆவது வாா்டுக்குள்பட்ட மீனாட்சிபுரம் பெருமாள் சந்நிதி தெருவில் ஏராளமான மருந்து விற்பனை நிறுவனங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் சாலையோரம் மருத்துவக் குப்பைகளைக் கொட்டக் கூடாது என மாநகராட்சி நிா்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி மண்டல சுகாதார அலுவலா் முருகன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை மீனாட்சிபுரம் சாலைகளில் ஆய்வு செய்தனா். அப்போது விதிமீறி மருத்துக் கழிவுகளை சாலையோரம் கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.