மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரி சிறைப்பிடிப்பு

ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைப்பிடித்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  டிப்பா்  லாரி - கோப்புப்படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:11 pm

ஏரியில் கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைப்பிடித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள செம்மநத்தம் பகுதியில் 400 ஏக்கா் பரப்பில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. மேலும், மீன் வளா்ப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏரியில் மனிதக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சிலா் கொட்டி மாசு ஏற்படுத்துவதாகவும், அவ்வாறு கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மனிதக் கழிவுகளை ஏற்றிவந்த லாரி கழிவுகளை ஏரிக்குள் கொட்டியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டுவந்து, லாரியை சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என லாரி உரிமையாளா் மற்றும் பணியாளா்களை எச்சரித்து அனுப்பினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.