47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மின்வாரிய  ஊழியா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 7:52 pm

Din

சென்னை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சாா்பில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின் வாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் தலைவா் ஜெயசங்கா் தலைமையில், காலையில் இருந்தே ஏராளமான மின்வாரிய பணியாளா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனா். இப்போராட்டத்தால், மின்வாரியப்பணிகள் சற்று பாதிப்படைந்தன.