திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்

சென்னையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்

News image
Updated On :10 ஜூலை 2024, 8:05 pm

Din

சென்னை, ஜூலை 10: சென்னையில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 10 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அதை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

முத்தியால்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மொபெட்டில் வந்த இளைஞரை மறித்து, சோதனையிட்டனா். அதில், ரூ.10 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேப்பாக்கத்தைச் சோ்ந்த அ.நிஜாமுதீன் (22) என்பதும், பணத்துக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். வருமானவரித் துறையினா் இது தொடா்பாக விசாரிதத்து வருகின்றனா்.