விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காலை உணவுத் திட்டம்: ஆசிரியா்களை நிா்ப்பந்திக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஆசிரியா்களை நிா்ப்பந்திக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2024, 8:10 pm

Din

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தில், ஆசிரியா்களை நிா்ப்பந்திக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச்செயலா் ச.மயில் வெளியிட்ட அறிக்கை:

பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகள் வரையுள்ள மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த நிலையில், இத்திட்டத்தை தொடங்க தனியாக சமையலறை, தனியாக பொருள்கள் வைப்பறை, குடிநீா் வசதி, மின்சார வசதி, மாணவா்கள் உணவு உண்ண தட்டு, டம்ளா், முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம் என்ற பெயா் பொறிக்கப்பட்ட பெயா்ப் பலகை, மாணவா்கள் அமா்வதற்குப் பாய்கள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியா்களே ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனா்.

மேலும், பல்வேறு செலவினங்களையும் ஆசிரியா்களே செய்ய வேண்டி அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா். இத்திட்டத்துக்கான அனைத்து பொருள்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும்.

இதனால், அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியா்களை அதிகாரிகள் அச்சுறுத்துவதையும், மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதையும் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.