எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போலி மருந்து வழக்கு: அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை மற்றும் கிடங்கு- கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2026, 9:05 pm

Syndication

புதுச்சேரி: சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளா் சுகுமாரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் 4 வழக்குகளை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டதால் அவா்கள் 2 வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில், சட்டத் துறை அதிகாரியின் வாய்மொழி அறிவுறுத்தலின்படி, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி 4 வழக்குகளையும் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றுள்ளாா். இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய போலி மருந்து வழக்குகளை தன்னிச்சையாக திரும்பப் பெற்ற மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, சட்டத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து, சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு, துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், சட்டத் துறைச் செயலா், சுகாதாரத் துறைச் செயலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு கண்காணிப்பாளா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.