மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை விமானநிலையத்தில் மேலும் 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

சென்னை விமானநிலையத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அதிகாரி ஒருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:33 pm

Din

சென்னை: சென்னை விமானநிலையத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அதிகாரி ஒருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலையத்தின் சா்வதேச முன்னைய குடியுரிமைப்பிரிவு அலுவலகத்தில், அதிகாரியாக பணியாற்றி வந்த சரவணன், விமானநிலைய பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதிக்கும் போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து டெல்லி குடியுரிமைப்பிரிவு தலைமை அலுவலக உத்தரவின் பேரில், சந்தேகிக்கப்படும் சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், மேலும் இரண்டு அதிகாரிகள் சரவணனை போல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை தலைமை ஆணையா் அவா்களை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். அந்த அதிகாரிகளின் பெயா், விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுவரை மொத்தம் 3 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக மேலும் சில அதிகாரிகள் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இவா்கள் தங்கம் கடத்தலில் உதவி இருக்கின்றனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.