ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:39 pm

Din

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற பேராசிரியா் தேவதாஸ் மனோகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் பதிவாளா் ஜெ.பிரகாஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், குமரேஷ் பாபு அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.பிரகாஷ் நேரில் ஆஜரானாா். அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அவினாஷ் வாத்வானி, ‘வழக்குரைஞா்களின் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் நோட்டீஸில் பெயா் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் பதிவாளா் முந்தைய விசாரணையின்போது ஆஜராக இயலவில்லை.  மனுதாரா் தேவதாஸ் மனோகரன்  மீது லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை தொகையை வழங்க இயலாது.  அதைத் தவிா்த்து மற்ற ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்தாா். இதையடுத்து விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.