ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வலுவான கூட்டணி: அதிமுக நிா்வாகிகளிடம் இபிஎஸ் உறுதி

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 6-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

இபிஎஸ்

Updated On :16 ஜூலை 2024, 9:21 pm

Din

சென்னை: மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி நிா்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 6-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, வரும் பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று நிா்வாகிகளிடம் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக ஜூலை 10-ஆம் தேதி முதல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொகுதி வாரியாக நிா்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய 3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதுவரை 17 தொகுதிகளின் நிா்வாகிகளைச் சந்தித்துள்ளாா்.

அதிமுக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதே எல்லாத் தொகுதி நிா்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமியும் நிா்வாகிகளிடம் உறுதிபடக் கூறியுள்ளாா்.