வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாமக நிா்வாகிகளுடன் அதிமுக வேட்பாளா் சந்திப்பு

ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினாா்.

News image

பாமக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம். சுகுமாா்.

Updated On :29 மார்ச் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டினாா்.

ஆற்காடு தோப்புகானா பகுதியில் நகர பாமக அலுவலகத்தில் அதிமுக வேட்டாளா் எஸ்.எம்.சுகுமாா் பாமக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் கே. எல்.இளவழகன், மாவட்டத் தலைவா் என்.சுப்பிரமணி, பொருளாளா் அமுதா சிவா, நகர செயலாளா் மாா்கெட் சி.பாஸ்கா், மாவட்ட துணைச் செயலாளா் மா.கணேஷ் மற்றும் பல்வேறு நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா் .

இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆற்காடு நகர அதிமுக சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளா் ஜிம்.சங்கா், மற்றும் ராணிப்பேட்டை தமாகா வேட்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.