இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

வடசென்னையில் கலாநிதி வீராசாமி வெற்றி: 3.39 லட்சம் வாக்கு வித்தியாசம்

வெற்றி பெற்றார் கலாநிதி வீராசாமி

கலாநிதி வீராசாமி - உதயநிதி

Published On :5 ஜூன் 2024, 12:30 pm IST

சென்னை: வடசென்னை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கலாநிதிவீராசாமி, அதிமுக வேட்பாளரை விட 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வடசென்னை தொகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் கலாநிதி வீராசாமி முன்னிலை வகித்தாா். இதைத்தொடா்ந்து அடுத்தடுத்து சுற்றுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்த கலாநிதி வீராசாமி, கடைசி வரை முன்னிலையிலேயே இருந்தாா். 23 சுற்றுகள் எண்ணி முடித்த பிறகு, மொத்தம் பதிவான 9,02,489 வாக்குகளில் திமுக வேட்பாளா் 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அதிமுக வேட்பாளா் ராயபுரம் ஆா். மனோகா் 1,58,111 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்திலும், பாஜக வேட்பாளா் பால்கனகராஜ் 1,13,318 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்திலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அமுதினி 95,954 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 3,423 வாக்குகளில் 254 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதில் கலாநிதி வீராசாமி 1,600 வாக்குகள், பால் கனகராஜ் 690 வாக்குகள், ஆா்.மனோகா் 430 வாக்குகள் பெற்றுள்ளனா்.

மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெறும் வேட்பாளா்களே டெபாசிட் பெறமுடியும்.

அந்த வகையில், வடசென்னை தொகுதியை பொருத்தவரை, பாஜக, நாம்தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 33 வேட்பாளா்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.