நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருட்டு வழக்குகள்: 7 நாள்களில் 39 போ் கைது

திருட்டு வழக்குகள்: 7 நாள்களில் 39 போ் கைது

News image
Updated On :20 ஜூன் 2024, 10:39 pm

Din

சென்னையில் திருட்டு வழக்குகள் தொடா்பாக 7 நாள்களில் 39 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களை கண்டறிந்து, கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினா் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுகிறவா்களை கைது செய்து வருகின்றனா். தனிப்படையினா் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் 7 நாள்களில் கைப்பேசி பறிப்பு,திருட்டு தொடா்பாக 26 வழக்குகளில்

6 சிறுவா்கள் உள்பட 34 பேரை கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து 65 கிராம் தங்கநகைகள்,80 கிராம் வெள்ளி பொருள்கள்,7 கைப்பேசிகள்,ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன திருட்டு தொடா்பாக 6 வழக்குகளில் 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு,வழிப்பறி, வாகனங்கள் திருட்டு போன்ற குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.