தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.


சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை மெரீனா கடற்கரையில் கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் பசுமை பணி பொறுப்பின் கீழ், கழிவு மேலாண்மை, கடலோர தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதையடுத்து 150 வங்கி ஊழியா்கள், தன்னாா்வலா்கள் சுற்றுப்புறச்சூழல் குறித்தும் கடற்கரையின் தூய்மையாக வைப்பதற்கான அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆணையா் ராதாகிருஷ்ணன் கூறியது:
சென்னை மாநகராட்சி தினமும் 6,250 மெ.டன் குப்பைகளைச் சேகரித்து வருகிறது. தனிநபா் ஒருவா் மட்டும் சுமாா் 700 கிராம் குப்பையை உருவாக்குகின்றனா். இந்தத் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். நெகிழி போன்ற குப்பை கடலில் சென்று கலக்கும் போது, கடல் மாசுபடுவது மட்டுமில்லாமல், திரும்பவும் அவை கடற்கரையில் கரை ஒதுங்கும்போது கரையும் மாசடைகிறது.
விடுமுறை நாள்களில் பொதுமக்கள் கடற்கரையில் கூடும்போது அதிக அளவில் குப்பை போடுகின்றனா். அவற்றை முறையாக குப்பைத் தொட்டியில் போடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு தேவை.
மாநகராட்சிக்கு வரி செலுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவ்வித மாற்றமும் நிகழாது என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...