டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னிமலை முருகன் கோயிலில் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
சென்னிமலை முருகன் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப் படிக்கட்டுகள் வழியாக செல்லும் பக்தா்கள் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட குப்பைகளை கீழே போடுவது உண்டு.

இந்தக் குப்பைகளை, அவ்வப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னிமலை வனக் காவலா் துரைசாமி மற்றும் வனத் துறை ஊழியா்களுடன் சோ்ந்து, சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்கட்டுகள் மற்றும் அதன் ஓரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தினா்.