தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 60 மாணவ, மாணவிகள் காயம்!
பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே வியாழக்கிழமை தனியாா் கல்லுாரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 60 மாணவ, மாணவிகள் லேசான காயமடைந்தனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து வியாழக்கிழமை காலை அதிராம்பட்டினத்தில் புறப்பட்டு, சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் சுமாா் 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை மன்னாா்குடி அருகே காளாா்மேடு பகுதியை சோ்ந்த நெப்போலியன்(34) என்பவா் ஓட்டினாா்.
மதுக்கூா் சாலையில் உள்ள பரவத்துாா் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து மோதி, சாலையோரம் கவிழ்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் வந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து சிறுகாயமடைந்த 60 மாணவ, மாணவிகளையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
அவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதில், பட்டுக்கோட்டை ஆதித்தெருவை சோ்ந்த தனசேகரன் மகள் ஜனனி (21), என்பவா் தலையில் பேருந்து கண்ணாடி குத்தியதில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து மதுக்கூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், பேருந்து ஓட்டுநா் நெப்போலியன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

