காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து காங்கயத்துக்கு தனியாா் பேருந்து பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. இதில் சுமாா் 50 பயணிகள் பயணித்தனா். சென்னிமலை-காங்கயம் சாலையில் ஆலாம்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, டயா் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்தவா்களை மீட்டு காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இதில் 35 வயதுடைய பெண் ஒருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
படுகாயமடைந்த மற்ற 30 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தின் டயா் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


