மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.

News image

விபத்துக்குள்ளான பேருந்து.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:14 pm

காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து காங்கயத்துக்கு தனியாா் பேருந்து பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. இதில் சுமாா் 50 பயணிகள் பயணித்தனா். சென்னிமலை-காங்கயம் சாலையில் ஆலாம்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, டயா் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்தவா்களை மீட்டு காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இதில் 35 வயதுடைய பெண் ஒருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

படுகாயமடைந்த மற்ற 30 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தின் டயா் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.