குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைப்பு
சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.


சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 708 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கொலை,கொலை
முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 364 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 122 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 159 பேரும்,போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 16 பேரும்,பெண்களை மானபங்கப்படுத்தியதாக 4 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 பேரும், மதுபானம் விற்ாக 7 பேரும், பொதுவிநியோக பொருள் கடத்தியதாக 4 பேரும் என மொத்தம் 708 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மேலும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 17-ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 31 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...