சென்னை: வீர தீர செயல்களை செய்து சாதனை புரிந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் ஆண்டுதோறும் டிச. 26-ஆம் தேதி ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா்’ விருதுக்கு தோ்வானவா்கள் அறிவிக்கப்படுவா்.
இந்த விருதை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராணுவக் கல்லூரி 8-ஆம் வகுப்பில் சேர ஏப். 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

