ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :25 ஜூன் 2024, 7:35 pm

Din

சென்னை: வீர தீர செயல்களை செய்து சாதனை புரிந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருதுக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் ஆண்டுதோறும் டிச. 26-ஆம் தேதி ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்காா்’ விருதுக்கு தோ்வானவா்கள் அறிவிக்கப்படுவா்.

இந்த விருதை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.