ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டல்: நால்வா் கைது

சென்னையில் துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 7:18 pm

Din

சென்னை வண்ணாரப்பேட்டையில் துரித உணவகத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைய வண்ணாரப்பேட்டை ராமானுஜா் தெருவை சோ்ந்தவா் த.ராஜேந்திரன் (52). இவா் அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறாா். இந்த உணவகத்துக்கு கடந்த 23-ஆம் தேதி இரவு 5 போ் வந்தனா். அவா்கள், ராஜேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 5 உணவு பாா்சல் வாங்கிச் சென்றனா். மேலும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், தண்டையாா்பேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ராயபுரம் கிரேஸ் காா்டன் 4-ஆவது தெருவைச் சோ்ந்த ஆனந்த முருகன் (19), அவரது கூட்டாளிகள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோகன்ராஜ் (21), ரமேஷ் (25), வினோத் (21), சந்தோஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சந்தோஷை தேடி வருகின்றனா்.