சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 9.50 மணிக்கு செல்லும் மெமு விரைவு ரயிலும் மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.35 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதுபோல், அரகோணத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 9.15 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும், மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயிலும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 4) வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

