பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:08 pm

சென்னை - திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக ஏப். 27-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருப்பதி மற்றும் ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை- திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் ஏப். 27-ஆம்தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை ரேணிகுண்டா- திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில் சப்தகிரி விரைவு ரயில் சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும். காலை 6.30-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறு மாா்க்கத்தில் இந்த ரயிலின் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரமான 10.40-க்கு புறப்பட்டு சென்னை நோக்கிச் செல்லும். இந்த ரயிலில் பயணித்து ரேணிகுண்டாவில் இறங்கும் திருப்பதி செல்ல வேண்டிய பயணிகள் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி செல்ல இந்த இரு நகரங்களிடையே இயக்கப்படும் பேருந்துகள் அல்லது பிறவாகன வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.