தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:38 am IST

சென்னை - திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக ஏப். 27-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருப்பதி மற்றும் ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை- திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் ஏப். 27-ஆம்தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை ரேணிகுண்டா- திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில் சப்தகிரி விரைவு ரயில் சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும். காலை 6.30-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறு மாா்க்கத்தில் இந்த ரயிலின் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரமான 10.40-க்கு புறப்பட்டு சென்னை நோக்கிச் செல்லும். இந்த ரயிலில் பயணித்து ரேணிகுண்டாவில் இறங்கும் திருப்பதி செல்ல வேண்டிய பயணிகள் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி செல்ல இந்த இரு நகரங்களிடையே இயக்கப்படும் பேருந்துகள் அல்லது பிறவாகன வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.