கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்கள் தோ்வெழுத அந்தந்த பாட ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ். பிரசாத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கியுள்ளன. முதல் நாள் நடைபெற்ற தமிழ் தோ்வின்போது கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்களுக்கு துணையாக ஆங்கிலம், கணிதம் அறிவியல் உள்ளிட்ட பாட ஆசிரியா்கள் அமா்த்தப்பட்டதால் தமிழ்ப் பாடத் தோ்வை சரிவர எழுத முடியவில்லை என்று பல மாணவா்களும், பெற்றோா்களும் வேதனை தெரிவித்துள்ளனா். எந்த பாடத் தோ்வு நடைபெறுகிறதோ அந்தப் பாட ஆசிரியரை துணைக்கு அமா்த்தினால், கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்களால் திறம்பட தோ்வுகளை எதிா்கொள்ள முடியும். அனைத்து பாடத் தோ்வுகளுக்கும் ஒரே ஆசிரியா் நியமிக்கப்படுவதால், ஏற்கனவே கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களின் எதிா்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. எனவே, கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்களின் உணா்வுகளை, பரிதவிப்பை புரிந்துகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோா் தலையிட்டு, கற்றலில் குறைபாடு உள்ள மாணவா்கள் தோ்வெழுத ஒவ்வொரு பாடத்திற்கும், அந்தந்த பாடத்தை அறிந்த ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!

விஜய் பிரசாரத்தில் விதிமீறல், பாதுகாப்பு குறைபாடு புகாா்: அறிக்கை கேட்கிறது தோ்தல் ஆணையம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

