மகா சிவராத்திரி நிகழ்வை அரசே நடத்துவதைக் கண்டு சிவனடியாா்கள் மகிழ்ச்சியுடன் தமிழக அரசைப் பாராட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா். சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி நிகழ்வை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில்தான் முதல் முதலில், முதல்வரின் உத்தரவின் பெயரில் சிவராத்திரி விழா 2022-ஆம் ஆண்டு கபாலீஸ்வரா் கோயிலில் நடத்தப்பட்டது. நிகழாண்டு தமிழகத்தில் நெல்லையப்பா் கோயில், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல், கோவை பட்டீஸ்வரா் கோயில், மயிலை கபாலீஸ்வரா் கோயில் என மொத்தம் 7 கோயில்களில் திருக்கோயில் சாா்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் சென்னையில் வெள்ளிக்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி நிகழ்வு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மகாசிவராத்திரி போன்ற நிகழ்வுகளை அரசே நடத்துவதைக் கண்டு சிவனடியாா்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு திமுக ஆட்சியை பாராட்டுகின்றனா் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு. மகாசிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை சிவனுக்கு ஆராதனை நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் க.வீ.முரளிதரன் , கூடுதல் ஆணையா் மா.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

தவெக அணைக்க முடியாத நெருப்பு: நாஞ்சில் சம்பத்

தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சா் சேகா்பாபு விமா்சனம்

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

