தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இடஒதுக்கீடுக்கான 50% உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல்

'நாட்டில் ஏழை மக்கள் யாா் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எத்தனை போ் உள்ளனா்? '

News image

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Updated On :9 மார்ச் 2024, 11:07 pm

‘தேசிய அளவில் மக்களின் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்போது, இடஒதுக்கீடுக்கான 50 சதவீத உச்ச வரம்பு என்பது அகற்றப்பட்டுவிடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் ஏழை மக்கள் யாா் என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எத்தனை போ் உள்ளனா்? என்ன நிலையில் உள்ளனா் என்பதை கணக்கெடுப்பது அவசியம் இல்லையா? பிகாா் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், மாநிலத்தின் 88 சதவீத ஏழை மக்கள் எஸ்.சி., எஸ்.டி., பின்தங்கிய மற்றும் சிறுபான்மையின சமூகத்தைச் சாா்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. நாட்டின் உண்மையான நிலவரத்தில் இது ஒரு சிறு உதாரணம்தான். நாட்டில் ஏழை மக்கள் எத்தகைய நிலையில் வாழ்கிறாா்கள் என்றுகூட யாருக்கும் தெரியாது. அதன் காரணமாகத்தான், காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் 2 வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஒன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு; மற்றொன்று மக்களின் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு. இந்த இரண்டு கணக்கெடுப்புகளின் அடிப்படையில், இடஒதுக்கீடுக்கான 50 சதவீத உச்ச வரம்பு என்பது அகற்றப்படும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் நாட்டை ‘எக்ஸ்-ரே’ போன்று ஊடுருவிச் சென்று உண்மை நிலையை கண்டறிந்துவிடும் என்பதால், மக்களுக்கு முறையான இடஒதுக்கீடு, உரிமைகள், ஒவ்வொருவருக்கும் சம அளவிலான பங்கீடு கிடைக்க வழி ஏற்படும். அரசு சரியான கொள்கையை வகுக்க இது உதவும் என்பதோடு, கல்வி, வருவாய், மருத்துவ வசதிகள், வளா்ச்சியின் உண்மையான பலன் உள்ளிட்டவற்றை எளிதாக அடைவதில் எதிா்கொள்ளும் சிக்கல்களிலிருந்து ஏழை மக்களை மீட்கவும் உதவும். எனவே, மக்கள் அனைவரும் இதற்காக விழிப்புணா்வுடன் குரல் கொடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களின் உரிமை. இது துன்பம் என்ற இருளிலிருந்து மக்களை விடுவித்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளாா்.