பெசன்ட்நகரில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நாடாளுமன்ற மக்களவை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பொதுத் தோ்தல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணா்வு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, ‘100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்’ எனும் தலைப்பிலான விழிப்புணா்வு நடைபயணம் சென்னை, பெசன்ட் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நடைபயணத்தை சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னா் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளைஞா் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையா் அமித், இணை தலைமை தோ்தல் அலுவலா் அரவிந்தன், சென்னை மாவட்ட இளைஞா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் சுலைமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

