/

பெசன்ட்நகரில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

பெசன்ட்நகரில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

Updated On :9 மார்ச் 2024, 6:15 pm

பெசன்ட்நகரில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பேரணியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நாடாளுமன்ற மக்களவை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பொதுத் தோ்தல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் மூலம் பல்வேறு விழிப்புணா்வு பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, ‘100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்’ எனும் தலைப்பிலான விழிப்புணா்வு நடைபயணம் சென்னை, பெசன்ட் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நடைபயணத்தை சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வாக்காளா் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னா் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளைஞா் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் மண்டல துணை ஆணையா் அமித், இணை தலைமை தோ்தல் அலுவலா் அரவிந்தன், சென்னை மாவட்ட இளைஞா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் சுலைமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.