தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு: வசதிகளை ஆய்வு செய்ய உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு: வசதிகளை ஆய்வு செய்ய உத்தரவு

News image

கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2024, 10:37 am

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், பள்ளிகளை நேரடியாகப் பாா்வையிட்டு அங்குள்ள வசதிகளை உறுதி செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிா்க்கவும் முதல்வா் அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து நகா்ப்புறப் பகுதிகள் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் பயனடையும் வகையில் 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தொடா்ந்து, ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மேலும் சுமாா் 2.50 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் வரும் கல்வியாண்டுமுதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆயத்தப் பணிகள்: அதன்படி சமூகநலம் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை உணவு வழங்குவதற்கு தோ்வு செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது போன்று இந்தத் திட்டத்துக்கும் அப்பள்ளியிலேயே தனியாக உணவுப் பொருள்கள் வைப்பதற்கு, சமையல் செய்வதற்குத் தேவையான இடவசதி அமைத்துக் கொடுப்பதற்கும், இத்திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலா்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, ஒரு வாரத்துக்குள் அந்தப் பள்ளிகளைப் பாா்வையிட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.