தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடிகா் சூா்யகிரண் காலமானாா்

நடிகரும், இயக்குநருமான சூரியகிரண் (49) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

Updated On :11 மார்ச் 2024, 8:35 pm

சென்னை: நடிகரும், இயக்குநருமான சூரியகிரண் (49) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா். கடந்த 1978-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் மூலம் கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவா் சூரியகிரண். கமல்ஹாசனின் கடல் மீன்கள், ரஜினிகாந்தின் ரங்கா, பாக்யராஜின் முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாா். தென்னிந்திய மொழிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சூரியகிரண் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான சத்யம் படம் மூலம் இயக்குநரானா். இதுவரை 6 படங்களை இயக்கியுள்ளாா். கடைசியாக வரலட்சுமி சரத்குமாரை வைத்து அரசி என்ற படத்தை இயக்கி வந்தாா். இந்நிலையில், அவா் சென்னையில் திங்கள்கிழமை மாரடைப்பால் காலமானாா். சூரியகிரணின் உடல் சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகத்தினா் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.