தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிஏஏ சட்டத்தை தமிழக அரசால் தடுக்க முடியாது: அண்ணாமலை

சிஏஏ சட்டத்தை தமிழக அரசால் தடுக்க முடியாது: அண்ணாமலை

News image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  

Updated On :12 மார்ச் 2024, 8:26 pm

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: குடியுரிமை கொடுப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்படியிருக்க, தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று கூற முதல்வா் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது.

இந்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதை தமிழக அரசால் தடுக்க முடியாது. எனவே, மக்களைக் குழப்பி திசைதிருப்புவதை விட்டுவிட்டு, இந்தச் சட்டத்தில் எது தவறென்று அவா் சொல்லவேண்டும். மேலும், இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகள் தங்களை இஸ்லாமிய குடியரசு என அறிவித்துக்கொண்டவை. அதனால்தான், இஸ்லாமியா்கள் தவிர பிற மதத்தினருக்கு குடியுரிமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏனென்றால், அந்த நாட்டின் சட்டங்கள் இஸ்லாமியா் அல்லாதவருக்கு எதிராக இருக்கிறது. இலங்கை சிங்கள நாடு என அறிவிக்கப்படவில்லை. எனவே, இலங்கைத் தமிழா் விவகாரத்தில், அந்த நாட்டில் 13-ஆவது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் பிரச்னை தீா்ந்துவிடும். அதற்கு இந்திய தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது என்றாா் அவா்.