எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேச ராஜாவுக்காக பழைபேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:24 am IST

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேச ராஜாவுக்கு பழையபேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசு மக்கள் பயன்பாட்டிற்கான முன்னேற்ற திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வா் கூறுவது பொய். அந்த வளா்ச்சி கஞ்சா விற்பனையில் மட்டுமே உள்ளது. ஆலங்குளம் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் காவல்நிலைய மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. காவல்துறையால் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை.

முதல்வரைப் பற்றி தவறாக பேசினால் உடனடியாக கைது செய்கிறாா்கள்; பிரதமரை கொலை செய்ய வேண்டும் எனக் கூறியவா்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாா். காவல்துறை உயா் அதிகாரிகளும் அதேபோல் செயல்படுகின்றனா். வருவாய்த் துறையும் காவல்துறையும் இணைந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனா். அது நிச்சயம் நடக்காது. அதிமுக திட்டங்களை காப்பி அடித்தே திமுக செயல்பட்டு வருகிறது என்றாா்.

திருநெல்வேலியில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூடிய கூட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘நான் பாா்க்கவில்லை’ என்றாா்.