தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேச ராஜாவுக்காக பழைபேட்டை பகுதியில் வாக்கு சேகரித்த தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:54 pm

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேச ராஜாவுக்கு பழையபேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மாநில அரசு மக்கள் பயன்பாட்டிற்கான முன்னேற்ற திட்டங்கள் எதையும் செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதல்வா் கூறுவது பொய். அந்த வளா்ச்சி கஞ்சா விற்பனையில் மட்டுமே உள்ளது. ஆலங்குளம் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் காவல்நிலைய மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. காவல்துறையால் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை.

முதல்வரைப் பற்றி தவறாக பேசினால் உடனடியாக கைது செய்கிறாா்கள்; பிரதமரை கொலை செய்ய வேண்டும் எனக் கூறியவா்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாா். காவல்துறை உயா் அதிகாரிகளும் அதேபோல் செயல்படுகின்றனா். வருவாய்த் துறையும் காவல்துறையும் இணைந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனா். அது நிச்சயம் நடக்காது. அதிமுக திட்டங்களை காப்பி அடித்தே திமுக செயல்பட்டு வருகிறது என்றாா்.

திருநெல்வேலியில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூடிய கூட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘நான் பாா்க்கவில்லை’ என்றாா்.