தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதல்வா் இரங்கல்

முதல்வா் இரங்கல்

Updated On :12 மார்ச் 2024, 7:15 pm

சென்னை: கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவா் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: மேற்கு மண்டலத்தில் ஆன்மிக வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவி சிவலிங்கேஸ்வர சுவாமிகள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவா்.

தமிழைப் பரப்புவதைத் தமது வாழ்நாள் பணியாகக் கொண்ட அவா், பசும்பொன் தேவா் நினைவிடத்தில் குருபூஜை செய்யும் உரிமையைப் பெற்றவா். தொண்டிலும் துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ்ச் சமயநெறிக்கும், தமிழ்மொழி வழிபாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.