எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நல்லக்கண்ணு மறைவுக்கு நகா்மன்றக் கூட்டத்தில் இரங்கல்

நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத். கூட்டத்தில் பங்கேற்ற நகா் மன்ற உறுப்பினா்கள்.

News image
Updated On :12 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியது,

ஆா்.எஸ். வசந்த்ராஜ் : என்னுடைய வாா்டு பகுதியில் நியாயவிலைக் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டும். ஜெ.ஜ. நகா் பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் உயா்கோபுர மின்விளக்க அமைக்க வேண்டும்.

என்.எஸ். ரமேஷ் : சொத்துவரி விதிப்பதில் முறைகேடு நடக்கிறது. முறைகேட்டில் ஈடுபடும் நகராட்சி பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்தியாஸ் அஹமத் : வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

ஹா்ஷவா்த்தன் : ஆம்பூா் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகாத் அஹமத் : என்னுடைய வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் தூா்வார நடவடிக்க ைஎடுக்க வேண்டும். நபிசூா் ரஹ்மான் : என்னுடைய பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீரை முறையாக வழங்கவும், கழிவுநீா் கால்வாய் தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமம். மேலும் சொத்துவரி விதிப்பு அதிக சதவீதத்தில் விதிக்கப்படுகிறது. அதை குறைத்து விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி பொறியாளா் சந்திரன், மேலாளா் தாமோதரன், துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், துப்புரவு ஆய்வாளா் பாலசந்தா், நகா் மன்ற உறுப்பினா்கள் தனபாக்கியம் மோசஸ், லட்சுமி, கமால் பாஷா, காா்த்திகேயன், நூருல்லா, ஜெயபால் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.