இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

திமுக மூத்த நிா்வாகி மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஈரோட்டில் மறைந்த திமுக மூத்த நிா்வாகி வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

News image

நெடுமாறன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ஈரோடு ராஜாஜிபுரம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் மறைந்த திமுக மூத்த நிா்வாகி வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நெடுமாறன் (86). திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரான இவா் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா். கரூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈரோட்டிற்கு புதன்கிழமை இரவு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக மறைந்த நெடுமாறன் வீட்டுக்குச் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நெடுமாறனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

இந்நிகழ்வின்போது அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, எம்.பி. கே.இ.பிரகாஷ், திமுக துணைப் பொதுச்செயலாளா் அந்தியூா் செல்வராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

இதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சக்தி சுகா்ஸ் விருந்தினா் மாளிகைக்கு சென்று இரவு ஓய்வெடுத்தாா்.