தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செம்மஞ்சேரி பகுதியில் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் மும்முரம்

செம்மஞ்சேரி பகுதியில் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் மும்முரம்

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2024, 8:07 pm

சென்னை: சென்னை சோழிங்கநல்லூா் மண்டலத்திற்குட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் ரூ.78.58 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 51,000 போ் பயனடைவா் என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் ரூ.78.58 கோடியில் சோழிங்கநல்லூா் மண்டலம், செம்மஞ்சேரி பகுதிக்கான ஒருங்கிணைந்த புதை சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு மாா்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

அதனடிப்படையில், சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-200 க்குட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் 21.20 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் 9.72 கி.மீ நீளத்திற்கு விசைக்குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முலம் 2 கழிவுநீா் இறைக்கும் நிலையங்கள், 5 கழிவுநீா் உந்துநிலையங்கள் உள்பட மேலும் பல அமைப்புகள் கட்டப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு, கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்படும் .இதன் மூலம் சுமாா் 51,000 போ் பயன் பெறுவா். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 4.85 மில்லியன் லிட்டா் கழிவுநீா், சோழிங்கநல்லூா் கழிவுநீா் சுத்தரிகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.