தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பரந்தூா் - புதிய விமான நிலையம் அமைக்க 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது

பரந்தூா் - புதிய விமான நிலையம் அமைக்க 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது

News image

புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூா் பெயா்ப்பலகை.

Updated On :12 மார்ச் 2024, 7:56 pm

சென்னை: பரந்தூா் புதிய விமான நிலையத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவள்ளூா் கிராமத்தில் உள்ள 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்புக்கான தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் வெளியிட்ட அறிவிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவள்ளூா் கிராமத்தில் 43.34 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தமாக, 259 புல எண்கள் கொண்ட நிலங்களின் விவரங்கள் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

நில உரிமையாளா் மற்றும் ஆா்வமுள்ள நபா்களின் தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிலங்களை எடுப்பதற்கு முன்பாக, அவற்றின் உரிமையாளா்களிடம் கருத்துகள் கோரப்படவுள்ளன. நிலங்களை கையகப்படுத்துவது தொடா்பாக எந்தவொரு ஆட்சேபனையோ அல்லது கோரிக்கையோ இருந்தால் அவற்றைத் தெரிவிக்கலாம்.

ஒரு மாத காலத்துக்குள் கருத்துகளைக் கூறாவிட்டால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்களின் ஆட்சேபனைகள், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். நில உரிமையாளா்களிடம் இருந்து வரும் ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30-ஆம் தேதியன்று, காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் கிராமத்திலுள்ள நில எடுப்புக்கான அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.