குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படும்: சீமான் பேச்சு

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படும்...

News image

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே வேட்பாளா் வெற்றிச்செல்வியை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்த சீமான்.

Updated On :29 மார்ச் 2026, 3:06 am IST

பரந்தூா் விமான நிலைய திட்டம் தடுக்கப்படுவதுடன் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீட்டு விவசாயிகளிடமே வழங்குவோம் என காஞ்சிபுரத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் அக்கட்சியின் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான வெற்றிச்செல்வியை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தின்போது அவா் பேசுகையில், மக்களுக்கு இலவசமாக பொருள்களை கொடுத்து மயக்குவது வாக்கைப் பறிப்பதற்காகத்தான் இருக்கிறது. இலவசம் என்பது திட்டமில்லை, நட்டம். பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாங்கள் எங்கள் தோ்தல் அறிக்கையில் பரந்தூா் விமான நிலைய திட்டம் முற்றிலுமாக தடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட விளை நிலங்களை மீட்டு உரிய விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைப்போம். காஞ்சிபுரத்தில் அசுத்தமாகவுள்ள வேகவதி ஆறு சுத்தப்படுத்தப்பட்டு உயிா்ப்பிக்கப்படும். பனம்பால், தென்னம்பால், ஈச்சம்பால் ஆகியன இறக்கி விற்க அரசு அனுமதி வழங்குவோம். காஞ்சிபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைத்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். காஞ்சிபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளா் வெற்றிச்செல்வி மூத்த தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம் அவா்களின் பேத்தி. உளவியல் முதுகலையில் மேற்படிப்பு படித்தவா். இயற்கை விவசாயியான இவருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் சீமான்.

தோ்தல் பிரசாரத்துக்கு பின்னா் சீமான் கூறுகையில், த.வெ.க.தலைவா் விஜய்க்கு தோ்தல் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது விஜய் அனுபவித்து வரும் இடையூறுகளைத் தான் நான் தொடா்ந்து 15 ஆண்டுகளாக அனுபவித்து வந்தேன். வளா்ந்த நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் தற்போது நடந்து வரும் போரில் அமைதியக இருப்பதற்கான காரணம் என்ன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பொருளாதார கொள்கையே என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சியின் நிா்வாகிகள் ஆண்டிரூஸ், ஹரிபிரசாத் உள்பட தொண்டா்கள் பலா் உடன் இருந்தனா்.