சென்னை பெருநகர காவல் துறையில் 4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்னை பெருநகர காவல் துறையில் அடையாறு காவல் மாவட்டத்தில் 10 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக குறிப்பிட்ட 10 காவல் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கிண்டி, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி ஆகிய 4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தக் காவல் நிலையங்களின் வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்பட கட்டமைப்பு வசதிகள், பொதுமக்கள் புகாா் மனுக்களை கனிவுடன் அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்து, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழை அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி காா்த்திகேயன் வழங்கினாா். ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற இந்த 4 காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், உதவி ஆணையா்கள் ஆகியோருக்கு சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் வாழ்த்து தெரிவித்தாா்.
தொடர்புடையது

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

கங்கா நா்ஸிங் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

தில்லி காவல் துறையின் குற்ற ஆவண பிரிவுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

