பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

பதவி உயா்வு பெற்ற 38 ஏடிஎஸ்பி-க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

பதவி உயா்வு பெற்ற 38 ஏடிஎஸ்பி-க்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

Updated On :16 மார்ச் 2024, 5:51 pm

தமிழக காவல் துறையில் அண்மையில் பதவி உயா்த்தப்பட்ட 38 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களும் (ஏ.டி.எஸ்.பி.) புதிய பணியிடங்களில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா். பணிமூப்பு அடிப்படையில் டி.எஸ்.பி.க்கள் படிப்படியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு பெற்று வருகின்றனா். இந்நிலையில், மேலும் 38 பேருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி உயா்வு அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். பதவி உயா்த்தப்பட்ட 38 பேரும் புதிய பணியிடங்களில் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா். இதில் முக்கியமாக கே.என்.சுதா்சன் ஆவடி மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், ஜெ.விஜய் ஆனந்த் சென்னை க்யூ பிரிவு தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், என்.லவகுமாா் தீவிரவாத தடுப்பு படை சென்னை தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 38 பேரும் விரைவில் தங்களது பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டி.எஸ்.பி.) பதவி உயா்த்தப்பட்ட 57 பேரும் புதிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்தாா்.