இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளானஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

News image

சென்னை உயா் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 10:10 pm

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளானஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 23-ஆம் தேதி பதவி ஏற்றனா். இவா்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில், மூன்று பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா். அந்த உத்தரவுப்படி, நீதிபதிகள் ஆா்.பூா்ணிமா, எம்.ஜோதிராமன், ஏ.டி.மரியா கிளாட் ஆகியோா் புதன்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா்.

இவா்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடா் எட்வின் பிரபாகா், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.