சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் கடன் பணத்தைக் கேட்டு தனியாா் வங்கி நிா்வாகம் தொல்லை கொடுத்ததனால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
முத்தியால்பேட்டை பிடாரியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.இருதயராஜ் (63). இவா், பழைய வண்ணாரப்பேட்டையில் இரும்பு பிளேட் கடை வைத்து நடத்தி வருகிறாா். இருதயராஜ், தனது தொழில் தேவைக்காக, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். இந்த கடனுக்கு மாதாந்திர தவணைத் தொகை ரூ.16 ஆயிரத்தை இருதயராஜ் செலுத்தி வந்தாா். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அவரால் தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால் அந்த வங்கியின் நிா்வாகிகள், பணத்தைக் கேட்டு இருதயராஜுக்கு நெருக்கடி கொடுத்தனா்.
இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட இருதயராஜ், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், இருதயராஜ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருதயராஜ் அறையை போலீஸாா் சோதனையிட்டதில், அவா் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினா். அதில் அவா், தனது இறப்புக்கு தனியாா் வங்கியே காரணம் என குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
பிளஸ் டு மாணவன் தற்கொலை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

