தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:41 pm

Syndication

கடன் தொல்லையால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகேயுள்ள ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (46). இவா் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்ஸியில் டெலிவரி தொழிலாளியாக வேலைசெய்து வந்தாா்.

இவருக்கு அதிகமான கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினா் லெட்சுமணனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.